விவசாயியின் வாழ்க்கையை வேறு எப்படி வர்ணிப்பது?
செங்கோட்டையில் ஆகஸ்ட் 15 அன்று கொடியேற்றிய பிரதமர் மன்மோகன் சிங் "கடந்த ஒன்பது ஆண்டுகளில்தான் அதிக தடவை விவசாயிகளின் விளைபொருட்களுக்கான ஆதரவு விலை ஏற்றப்பட்டுள்ளது" என்று பெருமைபட்டுக் கொண்டார். பீப்பில்ஸ் டெமாக்ரசி -ஆகஸ்ட் 12-18, இதழ் தலையங்கம் இது பற்றி ராஜ்ய சபாவில் விவசாய அமைச்சர் நவம்பர் 30,2012 அன்று அளித்த பதில் ஒன்றையே பதிலாக தந்துள்ளது.
விவசாய செலவினங்கள் மற்றும் விலைகள் ஆணையம் தருகிற தகவல்படி 2010-12 க்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் ஒரு குவிண்டால் (100 கிலோ) நெல் உற்பத்திச் செலவினம் ரூ 146 கூடியுள்ளபோது அரசின் குறைந்த பட்ச ஆதரவு விலையோ ரூ 80 மட்டுமே கூடியுள்ளது. கோதுமைக்கு செலவினம் 2011-13 க்கு இடைப்பட்ட காலத்தில் குவிண்டால் ரூ 171 கூடியிருக்கும் போது ஆதரவு விலையோ ரூ 65 தான் அதிகரித்துள்ளது.
உணவு பாதுகாப்பு, வறுமை, அந்நிய முதலீடு பற்றிய பிரதமரின் கருத்துக்கள் பற்றியும் இத் தலையங்கம் ஆழமான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.
No comments:
Post a Comment