Monday 19 August 2013

வழுக்கு மரம்


விவசாயியின் வாழ்க்கையை வேறு எப்படி வர்ணிப்பது?

செங்கோட்டையில் ஆகஸ்ட் 15 அன்று கொடியேற்றிய பிரதமர் மன்மோகன் சிங் "கடந்த ஒன்பது  ஆண்டுகளில்தான் அதிக தடவை விவசாயிகளின் விளைபொருட்களுக்கான ஆதரவு விலை ஏற்றப்பட்டுள்ளது" என்று பெருமைபட்டுக் கொண்டார். பீப்பில்ஸ் டெமாக்ரசி -ஆகஸ்ட் 12-18, இதழ் தலையங்கம் இது பற்றி ராஜ்ய சபாவில் விவசாய அமைச்சர் நவம்பர் 30,2012 அன்று அளித்த பதில் ஒன்றையே பதிலாக தந்துள்ளது.

விவசாய செலவினங்கள் மற்றும் விலைகள் ஆணையம் தருகிற தகவல்படி  2010-12 க்கு இடைப்பட்ட இரண்டு ஆண்டுகளில் ஒரு குவிண்டால் (100 கிலோ) நெல் உற்பத்திச் செலவினம் ரூ 146 கூடியுள்ளபோது அரசின் குறைந்த பட்ச ஆதரவு விலையோ ரூ 80 மட்டுமே கூடியுள்ளது. கோதுமைக்கு செலவினம் 2011-13 க்கு இடைப்பட்ட காலத்தில் குவிண்டால்  ரூ 171 கூடியிருக்கும் போது ஆதரவு விலையோ ரூ 65 தான் அதிகரித்துள்ளது.

உணவு பாதுகாப்பு, வறுமை, அந்நிய முதலீடு பற்றிய பிரதமரின் கருத்துக்கள் பற்றியும் இத் தலையங்கம் ஆழமான விமர்சனங்களை முன்வைத்துள்ளது.

No comments:

Post a Comment