Saturday 17 August 2013

"எங்கள் குழந்தைகள் பட்டினியால் சாகவேண்டாம்"

தி இந்து - ஆகஸ்ட் 18 இதழ் -மும்பையில் " ஏன் இந்திய ஏற்றத்தாழ்வுகள் விவாதத்திற்குரியவை" என்கிற தலைப்பில் மும்பையில் பத்திரிகையாளர் சாய்நாத் அவர்கள் ஆற்றிய  டி .வி.சிதம்பரம் நினைவுரை.

* " இந்தியா "FORBES" (போர்ப்ஸ்) இதழ் வெளியிடும் பில்லியனர் எண்ணிக்கை பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது. ஆனால் மனித வள மேம்பாட்டுக் குறியீட்டில் 136 வது இடத்தில் உள்ளது. போர் பாதிப்பிற்கு ஆளாகியுள்ள ஈராக், இலங்கையை விட இந்தியா மனித வள மேம்பாட்டில் கீழே உள்ளது.

* தானே அருகில் உள்ள ஓர் ஆதிவாசி பகுதிக்கு சாய்நாத் சென்ற போது அங்குள்ள பள்ளியில் ஒரு ஆசிரியர் " நீங்கள் அரசாங்கத்திடம் பேசி திங்கள் கிழமை மட்டும் மதிய உணவை இரட்டிப்பாக்க முடியுமா? வெள்ளிக் கிழமை மதியத்திற்கு பிறகு சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் குழந்தைகள் பட்டினி கிடக்கின்றன. திங்கள் கிழமை எரிகிற வயிற்றோடு பள்ளிக்கு வருகிற குழந்தைகளுக்கு வகுப்பு எடுக்க எப்படி ஆசிரியர்களுக்கு மனசு வரும்?" என்று கேட்டார்.

*  சென்னையில் ஒருமுறை பேசியபோது சனி, ஞாயிறும் பள்ளிக் கூடத்தை நடத்தச் சொல்லுங்கள்! எங்கள் குழந்தைகள் வாரம் இரண்டு நாள் பட்டினியாய்  இருப்பதை சகிக்க முடியவில்லை என்று தாய்மார்கள் கூறியதை சாய்நாத் பகிர்ந்துகொண்டார். இந்த செய்தியிலும் தெலுங்கானாவில் உள்ள மகபூப் நகர் தாய்மார்கள் 

"வெப்ப புயல் அடிக்கிற மே மாதத்திலும் பள்ளிக் கூடங்களைத் திறக்க வேண்டும். வருடாந்திர விடுமுறை வேண்டாம். எங்கள் குழந்தைகள் வெப்பப் புயலில் சுருண்டு இறந்தாலும் பரவாயில்லை;எங்கள் கண்கள் முன்னால் பட்டினியால் சாகவேண்டாம்"  

என்று  கேட்டது பதிவாகியுள்ளது.
  
வறுமை குறைந்துவிட்டதாக டெல்லி யோஜனா பவனில் உட்கார்ந்து புள்ளிவிவரங்களை அள்ளி விடுகிற "பெரிய பெரிய மூளைகளை" வைத்திருப்பவர்களுக்கு கொஞ்சமாவது இதயம் வேண்டாமா! என்ற கேள்வி இச் செய்தியை படிப்பவர்களுக்கு நிச்சயமாய் எழும். 

No comments:

Post a Comment