Sunday 18 August 2013

போரில் மேய்ந்த மாடு

"போரில் மேய்ந்த மாட்டிற்கு புடுங்கிப்போட்டால் கட்டுப்படியாகாது" - ரேகா ( மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டம் ) அமலாக்கம் பற்றிய ஜி.மணி அவர்களின் ( மாநில பொதுச் செயலாளர் , தமிழ்நாடு விவசாயத் தொழிலாளர் சங்கம்) தீக்கதிர் ( 17.8.2013) கட்டுரையில் அதில் நடைபெறுகிற முறைகேடுகளை விளக்குவதற்காக கூறப்பட்டுள்ள பழமொழி.

விதி மீறல்களை பற்றி விவரிக்கிற கட்டுரை , கறாராக அமலாக்கப்படும் ஒரு விதி பற்றி எடுத்துரைத்துள்ளது.

- ஒரு நாளைக்கு 42 கன அடி மண்ணை வெட்டிக் கொட்ட வேண்டும். அதாவது இரண்டு டன் அளவு மண்ணை தோண்டி எடுத்துப் போடவேண்டும். ரேகா திட்டத்தில் வேலைக்கு வருபவர்களில் 85% பேர் பெண்கள். இந்தியப் பெண்களில் 55% பேர் இரத்த  சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தேசிய குடும்ப நல ஆய்வு தந்துள்ள தகவல்.இவர்கள் 8 மணி நேரம் வெயிலில் நின்று 2 டன் மண்ணை தோண்டுவது என்றால் முடியுமா ! குறைவாகத் தோண்டினால் கூலி ரூ 30, ரூ 40 எனக் குறைந்துவிடுகிறது. இதை வைத்து எதை வாங்குவது, எதை சாப்பிடுவது என்று திண்டாடுகிறார்கள்-

இந்தக் கட்டுரையின் இறுதி பகுதியில் இடம் பெற்றுள்ள கோரிக்கைகளில் ஒன்று வேலை அளவை 24 கன அடியாகக் குறைத்திடு! என்பதாகும்.



No comments:

Post a Comment