Saturday 17 August 2013

திரிணாமுல்லின் "அமோக வெற்றி" எப்படி?

பீப்பில்ஸ் டெமாக்ரசி (ஆகஸ்ட் 5 - 11,2013) இதழில் கொல்கத்தாவிலிருந்து தேபாசிஸ் சக்கரவர்த்தி எழுதியுள்ள  HOW TRINAMOOL ACHIEVED A ' LANDSLIDE' WIN என்ற கட்டுரையில் கிடைக்கிற தகவல்கள்-

* ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள புர்சுரா- பூத் 80, ஜில்லா பரிசத் சீட் எண் 36- மார்க்சிஸ்ட் கட்சி ஜீரோ வாக்குகளையே பெற்றுள்ளது. திரிணாமுல் வேட்பாளர் 604 வாக்குகளை வாங்கியுள்ளார். அதே ஜில்லா பரிசத்தின் வேறு நான்கு பூத்துகளில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் 1,4,6,8 வாக்குகளையே பெற்றுள்ளபோது திரிணாமுல் வேட்பாளர் 498,555,369,577 வாக்குகளை பெற்றுள்ளார். இந்த வித்தியாசம் தேர்தல் நேர்மையாக நடந்தேறவில்லை என்பதை நிரூபிப்பதாக உள்ளது என்ற கட்டுரை வாதம் வலுவாக உள்ளது.

* ஜில்லா பரிசத் சீட் எண்கள் 35,36,38,39,40 லிலும் இடது முன்னணி வேட்பாளர்கள் 40 பூத்துகளில் ஒற்றை இலக்க வாக்குகளையும், 60 பூத்துகளில் 30 க்கும் குறைவான வாக்குகளையும் பெற்றுள்ளனர். 

* பர்த்வான் - கெட்டுராம் ஜில்லா பரிசத் சீட்டில் முராகராமில் உள்ள மூன்று பூத்துகளில் மார்க்சிஸ்ட் கட்சி 1,2,3 என வாக்குகளை பெற்றுள்ள போது திரிணாமுல் 554,707,356 வாக்குகளை பெற்றுள்ளது. இன்னும் மூன்று பூத்துகளில் 7,8,9 வாக்குகளையும் திரிணாமுல் 350 முதல் 650 வாக்குகள் வரை பெற்றுள்ளது. இந்த பூத்துகள் அனைத்திலும் கடந்த சட்டமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியே அதிக வாக்குகளை பெற்றிருந்தது.

* வடக்கு 24 பர்கானா மாவட்ட மினாகா - துதுர்டகா ஒன்றியத்தில் மொத்தமுள்ள 13 சீட்டுகளில் 6 ல் திரிணாமுல் போட்டியின்றி வெற்றி பெற்றது. ஆனால் போட்டி நடைபெற்ற 7 இடங்களிலும் மார்க்சிஸ்ட் கட்சி வென்றுள்ளது. உருட்டல் மிரட்டல் மூலம் வேட்புமனு தாக்கல் செய்வது தடுக்கப்படாமல் இருந்தால் அந்த 6 லிலும் இடது முன்னணி வெற்றி பெற்றிருக்கும் என்ற கட்டுரையாளர் கருத்து  நியாயமாகவே இருக்கிறது.  

வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதிக்காமை, பூத்துகளை கைப்பற்றியது, வாகு எண்ணிக்கையில் மோசடி, முகவர்களை விரட்டியடித்தது, வெற்றி பெற்ற இடங்களில் கூட ஆவணங்களை கிழித்து எறிந்து முடிவை மாற்றி அறிவித்தது என  தில்லுமுல்லுகளை விவரிக்கிற கட்டுரை இது.

ஆனால் நேர்மையான மதிப்பீடு ஒன்றையும் பதிவு செய்து அக்கட்டுரை முடிகிறது. திரிணாமுல் வெற்றி என்பதே இந்த முறைகேடுகளால்தான் என்று சொல்ல முடியாது. ஆனால் இந்த தில்லுமுல்லுகள் இல்லாவிட்டால் இவ்வளவு பெரிய வெற்றியை பெற்றிருக்க முடியாது என்பதே அது. 

வலுவான ஆதாரங்களோடு, உண்மை வழுவாமல் எழுதப்பட்ட கட்டுரை.  

No comments:

Post a Comment