Saturday, 17 August 2013

வங்கிகளின் எதிர்காலத்தை 30 பேர் சீரழிப்பதா?

இந்து 16.8.2013 இதழின் முதல் பக்க செய்தியொன்றில்  வாராக்கடன்கள் காரணமாக பொதுத்துறை வங்கிகள் சந்தித்துள்ள இழப்புகள் குறித்து சி.பி.ஐ விசாரணை துவங்கியிருப்பதை செய்தியாளர் தேவேஷ் கே. பாண்டே தெரிவித்துள்ளார்.

அதில் மறுசீரமைக்கப்பட்ட கடன்களின் மதிப்பு ஐந்து லட்சம் கோடியை தொட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இத்தொகை 2 லட்சம் கோடிகளாக இருந்தது. மொத்த கடன்களில் 31.3.2009 ல் 4.87 சதவீதமாக இருந்த மறுசீரமைக்கப்பட்ட கடன்கள் 31.3.2012 ல் 8.24 சதவீதமாக உயர்ந்துள்ளது. இத்தகைய கடன்களில்தான் மிகப்பெரும் தொழிலதிபர்கள் புகுந்து விளையாடியிருப்பதாக புகார். 

அண்மையில் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வாராக்கடன் வைத்துள்ள முதல் பெரிய 30 கணக்குகளை நெருக்கி வசூலித்தாலே அவ்வங்கிகளின் பாலன்ஸ் ஷீட்டுகளை தேற்றிவிடலாம் என்றார்.  30 பேர் வங்கிகளின் எதிர்காலத்தையே சீரழிக்க முடியுமென்றால் இவ்வளவு நாள் வேடிக்கை பார்த்தவர்களை என்ன செய்வது !


No comments:

Post a Comment